2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பல திருட்டுக்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். வல்வெட்டித்துறைப் பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் இருவரை நீண்டகாலமாக கண்காணித்துவந்த  நிலையில், இவர்களை நேற்று வியாழக்கிழமை  கைதுசெய்ததாக வல்வெட்டித்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஈ.திஸ்ஸபண்டார தெரிவித்தார்.

உடுப்பிட்டியைச் சேர்ந்த (வயது 32) நபரை அவரது வீட்டிலும் சங்கானையைச் சேர்ந்த (வயது 27) நபரை சாட்டிக் கடற்கரையிலும் கைதுசெய்ததுடன்,  இவர்களிடமிருந்து இலத்திரனியல் பொருட்களை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

இவர்கள் இருவரும் வல்வெட்டித்துறையில்  பல திருட்டுக்களில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு தெரியவந்தது.  எனினும்,  இவர்கள் தலைமறைவாக இருந்தமையால்   உடனடியாக  கைதுசெய்ய முடியாதிருந்தது.  மேலும், இவர்கள் திருடியதாகக் கூறப்படும் பல பொருட்களை விற்பனை செய்திருந்தமையும் தெரியவந்தது.

தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X