2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணலுடன் சென்ற நால்வருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரமொன்றில் மணல் கொண்டுசென்ற கெற்பேலியைச்; சேர்ந்த 04 பேருக்கு தலா 50,000 ரூபா படி தண்டமாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம்  விதித்தார்.

கெற்பேலிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்த 04 பேரையும்  கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொடிகாமம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்

இந்த வழக்கு புதன்கிழமை  (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து,  இவர்களுக்கு நீதவான் தண்டம் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .