2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரதேசசபை ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம்

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் கீழ் பணியாற்றுவதற்கு 21 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் பிரதேச சபையில் வைத்து வியாழக்கிழமை (10) வழங்கப்பட்டன.

சுகாதாரத் தொழிலாளர்கள், ஆயுர்வேத வைத்தியசாலை மருந்தாளர்கள், வெளிக்களத் தொழிலாளர்கள், மயானத் தொழிலாளர்கள் மற்றும் காரியாலய உதவியாளர்கள் என்பவர்களுக்கான நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அனுமதியுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று, அந்த நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே வியாழக்கிழமை (10) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சபைச் செயலாளர், உப அலுவலகங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமனக் கடிதங்களை ஊழியர்களுக்கான நியமனங்களை வழங்கினார்கள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .