2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பனைமரச் சிலாகைகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி 02 பாரவூர்திகளில் பனைமரச் சிலாகைகளை கொண்டுசென்றதாகக் கூறப்படும்  இருவரை நெல்லியடிப் பகுதியில் புதன்கிழமை (09) இரவு கைதுசெய்ததாக நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸார் வியாழக்கிழமை (10) தெரிவித்தனர்.

பருத்தித்துறையிலிருந்து கொடிகாமத்துக்கு பனைமரச் சிலாகைகளை கொண்டுசென்றபோது  கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரும், தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .