2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பொலிஸாருக்கு மதுபானம் விற்றவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., வல்வெட்டித்துறை, நெடியகாட்டுப் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்ற 42 வயது சந்தேகநபரொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரமின்றி வீடொன்றில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மதுபானம் வாங்குபவர்கள் போன்று சென்ற பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X