2025 ஜூலை 05, சனிக்கிழமை

துவிச்சக்கரவண்டிகளை திருடியவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாவட்டத்தின் இளவாலை, சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கரவண்டிகளைத் திருடிவந்த சுன்னாகம் சூரவரத்தையினைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) உத்தரவிட்டார்.

அச்சுவேலிப் பொலிஸாரினால் சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை நேற்று (13) மாலை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

சூரவரத்தைப் பகுதியிலுள்ள துவிச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில், திருட்டுத் துவிச்சக்கரவண்டியொன்றினை மேற்படி நபர் விற்பனை செய்துகொண்டிருக்கும் போது அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, சந்தேகநபரிடமும் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் திருடப்பட்ட 9 துவிச்சக்கரவண்டிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .