2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபிகா, யோ.வித்தியா, நா.நவரத்தினராசா


யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (20) ஆரம்பமாகியது.

இந்நிகழ்வு போரின் போது இறந்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது.

யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பயிற்சிப் பட்டறையில், இலங்கையின் அபிவிருத்தியில் ஊடகவியலாளர்கள் எவ்வாறான பங்களிப்பினை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இப் பயிற்சிப்பட்டறையில், தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.தில்லைநாதன், இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுனந்த மஹேந்திர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவின் கலாநிதி சுவாமிநாதன் விமல், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்தச் செயலமர்வில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ஊடகவியற்துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X