2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காதலிக்கும்படி அட்டகாசம் புரிந்தவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 23 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., இணுவில், மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்கு திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

யுவதியின் பெற்றோர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதேயிடத்தினைச் சேர்ந்த 20, 23, 24 மற்றும் 26 வயதுடைய 4 இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து, அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

மேற்படி 4 இளைஞர்களில் ஒருவர் மேற்படி யுவதியினைக் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், அதற்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்த நிலையில், அவ்விளைஞனைக் காதலிக்க வற்புறுத்தியே மேற்படி இளைஞர்கள் கலாட்டாவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .