2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மூன்று சந்தேகநர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நவாலி பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவாலி பகுதியினைச் சேர்ந்த 25, 26 மற்றும் 35 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். நவாலி பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது, மேற்படி மூன்று நபர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மூன்று நபர்களும் கண்காணிக்கப்பட்ட வந்தவேளை, அந்நபர்கள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்பது உறுதியாக வெளிப்பட்டது.

இதனையடுத்து, 3 சந்தேகநபர்களும் நேற்று திங்கட்கிழமை (28) மாலை அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை நாளை புதன்கிழமை (30) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .