2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்திய வியாபாரிகள் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகள் இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) நண்பகல் கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் தமிழகம், திண்டுக்கல் பகுதியினைச் சேர்ந்த பொம்மையார் செட்டியார் (வயது 45) மற்றும் கணேஷன் முருகேசன் (வயது 34) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேற்படி இரு வியாபாரிகளிடமிருந்து தலா 2 பொதிகளில் புடவைகளையும் மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரு வியாபாரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த ஜுன் மாதம் தெல்லிப்பளை பகுதியில் இரண்டு இந்திய வியாபாரிகளும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 2 இந்திய வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு, முறையே மல்லாகம் மற்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றங்களினால் அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .