2025 ஜூலை 09, புதன்கிழமை

பனை மரங்கள் தறித்தவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், இளவாலை, மெய்கண்டான் பகுதியில் 8 பனை மரங்களைத் தறிப்பதற்கு அனுமதி பெற்று, 11 பனை மரங்களைத் தறித்த சந்தேகநபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தறித்த பனைமரங்களையும் பறிமுதல் செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், 8 பனைமரங்களைத் தறிப்பதற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், மேற்படி நபர் அதனைவிட மேலதிக 3 பனை மரங்களையும் சேர்;த்துத் தறித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .