2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பனை மரங்களை தறித்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், வரணி, நாவற்காட்டுப் பகுதியில் அனுமதியின்றி பனை மரங்களைத் தறித்த வடமராட்சி நவிண்டில் பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், பனை மரங்களைத் தறித்துக் கொண்டிருந்த மேற்படி நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, தறிப்பதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை.

இதனையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று பனை மரங்களின் குற்றிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்படி சந்தேகநபர்களை திங்கட்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .