2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டில் மூவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்ப்பாணம், மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸார் திங்கட்கிழமை (18) தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜெயசீலன் (வயது 23), என்.தர்மசீலன் (வயது 19), ரா.பரமசாமி (வயது 55) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .