2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் வயோதிபர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை கந்தவுடையார் சந்தியில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற விபத்தின்போது வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப்; பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் துவிச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த அதேயிடத்தைச் சேர்ந்த செல்வமாணிக்கம் அப்புத்துரை (வயது 64) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .