2025 ஜூலை 09, புதன்கிழமை

மாணவர்களுக்கு லேகியம் விற்றவருக்கு தண்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். மிருசுவில் உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'லேகியம்' எனப்படும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் வெள்ளிக்கிழமை (29) தீர்;;ப்பளித்தார்.

உசன் பகுதியில் பாடசாலை மாணவர்கள் லேகியம் எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக பொலிஸாரிற்குத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், மேற்படி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில், இதனை விற்பனை செய்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேற்படி சந்தேகநபர் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி வழக்கு வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் மேற்படி நபருக்கு தண்டம் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .