2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புத்தரும் போவார்: சிவாஜிலிங்கம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், பொ.சோபிகா

வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது.

இதில் முப்படைகளும் வடக்கிலிருந்து இவ்வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் இராணுவ முகாம் அமைத்து இருக்கும் போது, புத்தர் சிலையொன்றையும் அதில் நிறுவி வழிபாடுகள் செய்து வந்தனர்.

தொடர்ந்து, இராணுவ முகாம் அகற்றப்படும் போது வழிபாட்டிற்காக வைத்திருந்த புத்தர் சிலையையும் கையோடு எடுத்து சென்றனர். அந்தவகையில், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் போதும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .