2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கரையொதுங்கிய மற்றும் இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார்.

செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒரு படகுடன் நெடுந்தீவில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களும், கடந்த 7ஆம் திகதி கச்சதீவு பகுதியில் காற்றினால் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

16 இந்திய மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினராலும், மிகுதி 8 மீனவர்கள் நெடுந்தீவு பொலிஸாரினாலும் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .