2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மற்றுமொரு சடலம் மீட்பு

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த லோகநாதன் அம்பிகாதேவி (வயது 52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் திருமணம் செய்திராததன் காரணமாக அவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட பெண்ணி;ன் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .