2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கொடிகாமத்தில் கிளைமோர் மீட்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கொடிகாமம், இயற்றாலை பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து  கிளைமோர் ஒன்று  வியாழக்கிழமை (04) மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தனர்.

மேற்படி காணி  உரிமையாளர், தனது காணியை  துப்பரவுபடுத்திக்கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பொருள்  இருப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரின் 522ஆவது படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் அவ்விடத்துக்கு சென்று கிளைமோரை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .