2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காலாவதியான பொருட்களை விற்ற வர்த்தகர்களுக்கு; அபராதம்

George   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

வடமராட்சி பகுதியிலுள்ள 12 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தால் 66 ஆயிரம் ரூபாய் தண்டம், வெள்ளிக்கிழமை (05) விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்தார்.

அண்மையில், அதிகார சபை அதிகாரிகளால், பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாமை மற்றும் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களை செய்த  12 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் ஜே.கஜநிதிபாலன் அபராதங்கள் விதித்து தீர்ப்பளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .