2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமையுடன் ஒருவர் கைது

George   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் கடலாமையுடன் வெள்ளிக்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (13) தெரிவித்தனர்.

குறித்த நபர் 2 அடி நீளம் உடைய  கடலாமையை இறைச்சியாக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தெக நபரிடமிருந்து மீட்கப்பட்ட கடலாமை யாழ். பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .