2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மணல் கடத்தியவருக்கு அபராதம்

George   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதிப்பத்திரமின்றி கிளிநொச்சி பளை பகுதியில்  மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், திங்கட்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

கடந்த நவம்பர் மாதம் பளை பொலிஸாரால், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு தவணை அடிப்படையில் இடம்பெற்று, திங்கட்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதவான் அபராதம் விதித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .