2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூன்று பேருக்கு தலா 7,500 ரூபாய் அபராதம் விதித்துடன், அவர்களுடைய சாரதி அனுமதிப்பத்திரத்தை 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் புதன்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சி நகரம், பரந்தன் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு புதன்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தினால், 3 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X