2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இருவர் காயம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான், உமையாள்புரம் கண்ணகையம்மன் ஆலயத்துக்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதன்போது இருவர் படுகாயமடைந்தள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X