Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களை அண்மித்த காட்டுப்பகுதிகளில் பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள் சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றதாக அப்பகுதி மக்களால் குற்றம் சுமத்தப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளம், கோணவில் ஊற்றுப்புலம் ஆனைவிழுந்தான் குளம், வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளிலும் தினமும் சட்டவிரோதமான முறையில் பெறுமதி வாய்ந்த முதிரை மற்றும் பாலை போன்ற காட்டு மரங்கள் தினமும் கடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான மரக்கடத்தல்கள் இராணுவத்தினர் மற்றும் சில அதிகாரிகள் ஆகியோரின் துணையுடன் தான் கடத்தப்பட்டு வருவதாக மேற்படி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் கருத்து தெரிவிக்கும் போது,
இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காட்டு மரங்களையும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் மரங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago