2025 ஜூலை 16, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு அபராதம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சாரதி அனுமதிபத்திரம் இன்றி, மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 13,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே.அரியநாயகம், வெள்ளிக்கிழமை (10) தீர்ப்பளித்தார்.

சுன்னாகம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் இருவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்கு 10,000 ரூபாயும், சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனம் செலுத்திய குற்றத்துக்கு 3,000 ரூபாயுமாக 13,000 ரூபாய்  அபராதம் விதித்து பதில் நீதவான் தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X