2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். நெல்லியடி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நெல்லியடி இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இன்பன் புஸ்பகரன் (வயது 36) என்பவர் வெள்ளிக்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் பிரதீபன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கும் பஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X