2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ். நகரப்பகுதியில் கஞ்சா நுகர்ந்த இளைஞன் கைது

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்திப்பகுதியில் கஞ்சா நுகர்ந்து கொண்டிருந்த இளைஞனை, வெள்ளிக்கிழமை(17) மாலை கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் யாழ். நல்லூர் கோயில் வீதியினை சேர்ந்த 18 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர்.

அத்துடன், கைதான சந்தேக நபரிடமிருந்து 1,240 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில்; ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .