2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விதிமுறையினை மீறிய சாரதிக்கு அபராதம்

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய நபர் ஒருவருக்கு 13,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (17) தீர்ப்பளித்தார்.

தெல்லிப்பழை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு, வெள்ளிக்கிழமை (17) மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறியமை, சாரதி அனுமதிபத்திரம் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை தெல்லிப்பழை பொலிஸார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

சாரதி, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதவான் 13,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .