2025 ஜூலை 07, திங்கட்கிழமை

18 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்றத்துக்குட்பட்ட, வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 18 வர்த்தக நிலைய உற்பத்தி உரிமையாளர்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (15) மல்லாகம் நீதிமன்ற நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 78,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அதிகார சபையின் இணைப்பு அதிகாரி தனசேகரம் வசந்தசேகரம், சனிக்கிழமை (16) தெரிவித்தார்.

நிறை குறைவாக பண் உற்பத்தி செய்த 02 வெதுப்பக உரிமையாளர்கள், விலைப்பட்டியலினை காட்சிப்படுத்த தவறிய 07 வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மற்றும் காலாவதியான பொருட்களினை விற்பனை செய்த 09 வியாபார உரிமையாளர்களுக்கே இவ்வாறு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது, வர்த்தக உரிமையாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில் 78,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .