2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுபோக பயிர்களுக்கு எரிபந்த நோய் தாக்கம்

George   / 2015 மே 17 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கையில் எரிபந்த நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 14,000 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையிலேயே எரிபந்த நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் நெற் செய்கையுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்ட சிறுதானியச் செய்கை முற்றாக அழிவடையும் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .