2025 ஜூலை 02, புதன்கிழமை

பௌர்ணமி தினத்தில் சாராயம் விற்றவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 03 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பௌர்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (02), சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பண்டத்தரிப்பு பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வா தெரிவித்தார்.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணைகளை அடுத்து அவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .