2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருட்டுச் சந்தேகத்தில் கணவன், மனைவி கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 03 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.காரைநகர் பிரதான வீதியிலுள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகையை திருடிய சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவியான இருவர், செவ்வாய்க்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுக்குள் கடந்த மே மாதம் 31ஆம் திகதி உள்நுழைந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பவுண் நகை என்பன திருடப்பட்டிருந்தது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (01) முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, அதேயிடத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .