2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அரியாலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 03 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைத்தள வளவுக்குள் இருந்து 2 குண்டுகள் புதன்கிழமை (03) கண்டிபிடிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் வெடிகுண்டு ஒன்றைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பொலிஸார் அங்கு சென்ற போது அங்கு மேலும் ஒரு குண்டு இருந்துள்ளது.

இது தொடர்பில் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களின் உதவியுடன் குண்டுகளை மீட்கவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .