2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யுவதியின் சங்கிலியை அறுக்க முற்பட்ட ஐவரில் ஒருவர் கைது

George   / 2015 ஜூன் 12 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி 

யாழ்ப்பாணம் சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை(12) காலை நடந்து சென்றுகொண்டிருந்த யுவதியின் சங்கிலியை அறுக்க முற்பட்டவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் கூறினர். 

ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த யுவதியை பின்தொடர்ந்து சென்ற ஐவர் கொண்ட குழு, யுவதியின் சங்கிலியை அறுத்து செல்ல முயற்சித்துள்ளது. 

எனினும் சங்கிலியை அறுக்க முடியாத நிலையில் ஐவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். 

அப்பகுதியில் நின்றிருந்த யுவதியின் சகோதரர், மற்றும் சிலர் துரத்திச் சென்று ஓடியவர்களில் ஒருவரைக் பிடித்து நையப்புடைத்தனர். தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பிடிபட்ட நபர் ஒப்படைக்கப்பட்டார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X