2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபை – எம்.பி.க்களுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்படும்

Menaka Mookandi   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இணக்கப்பாடுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டமொன்றை நடத்துவது தொடர்பில் இன்றைய தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றது. இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'இன்றைய சந்திப்பில் இது தொடர்பில் ஆராயப்பட்டது. உறுப்பினர்களுக்கு இடையில் கூட்டங்களை நடத்துவது அவசியமானதாகவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பல விடயங்கள் விபரமாகப் பேசப்படும். உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் செய்யப்படும்.

உறுப்பினர்களிடத்தேயுள்ள தவறான கருத்துக்களுக்கு பதிலளிக்கவும், உறுப்பினர்கள் ஒன்றுபட்டு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தக் கூட்டம் உறுதுணையாகவிருக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X