2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வளலாய் மக்களுக்கு கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதி மக்களுக்கு கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பில் வழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை தன்னார்வு தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு முதற்கட்டமாக 113 குடும்பங்கள் ஆர்வம் கொண்டு பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

மீளக்குடியேறி வரும் மக்களுக்கு முக்கிய பிரச்சினையாக வெடிபொருட்கள் மற்றும் கண்ணிவெடிகள் காணப்படுகின்றன.

பொதுமக்கள் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடிக்காத நிலையில் எறிகணைகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் போன்ற வெடிபொருட்களை இனங்கண்டு இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

மீளக்குடியேறிய மக்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த தன்னார்வு நிறுவனம் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன், அந்த மக்களுக்கான அடிப்படை சுகாதார தேவைகள் குறித்தான அறிவூட்டும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .