2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வர், நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பிலிருந்து வருகை தந்த புலனாய்வாளர்களுடன் அச்சுவேலி பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அச்சுவேலி நகரப்பகுதியில் மின்மானியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்திய இருவரும் அச்சுவேலி – புன்னாலைக்கட்டுவன் வீதியில் திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .