2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கொட்டகைக்குள் வாழும் மக்கள்

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் மீளக்குடியேறும் மக்களுக்கு யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் உதவியில் வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகையில், அப்பகுதி மக்கள் தங்களுக்கான தற்காலிக கொட்டகைகளை அமைத்து அதில் வசித்து வருகின்றனர்.

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 113 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். 

அவர்களில் 24 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 25 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு யு.என்.எச்.சி.ஆர் நிறுவனம் முன்வந்துள்ளது. தற்காலிக வீடுகள் அமைக்கும் வரையில் காத்திருக்காமல் தங்களுக்கு தேவையான அளவுகளில் கொட்டகைகளை அமைத்து அதில் வசிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .