2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வியாபாரி கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 18 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா வீஸாவில் இலங்கைக்கு வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இந்திய வியாபாரி ஒருவரை புதன்கிழமை (17) கைதுசெய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, கிருஸ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் தினேஸ்குமார் (வயது 25) என்பவரே கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 59 சல்வார்களும் கைப்பற்றப்பட்டன.

அல்வாய் நாவலடிச் சந்திப் பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த  இவரை, பொலிஸார் விசாரணை செய்ததில் இவர் சுற்றுலா வீஸாவில் இலங்கைக்கு  வந்திருந்தமை தெரியவந்தது. இதையடுத்து வியாபாரியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .