Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 18 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்
யாழ். வல்வைச் சந்தியில் வியாழக்கிழமை (18) அதிகாலை 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு 3ஆம் சந்தியைச் சேர்ந்த செந்திவேல் திவாகரன் (வயது 18) என்பவர் உயிரிழந்ததுடன், அதேயிடத்தைச் சேர்ந்த அனந்தராஜா அனோஜன் (வயது 18) யாழ். போதனா வைத்தியசாலையிலும், வேதநாயகம் சிவரூபன் (வயது 20) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், இருவர் தலைக்கவசம் அணியவில்லை. மோட்டார் சைக்கிளில் முன்சில்லில் காற்று போனமையால் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago