2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரிய கலாசாலையில் கல்விக் கண்காட்சி நாளை

George   / 2015 ஜூன் 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய பயிலுநர்களின் கல்விக்கண்காட்சி, நானை வெள்ளிக்கிழமை (19) ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், கோப்பாய் மகா வித்தியாலய அதிபர் த.ஞானப்பிரகாசம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கற்றல் வளங்களை ஆசிரிய பயிலுநர்களுக்கு அடையாளப்படுத்தும் நோக்குடன் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி மாணவர்களுக்கான கற்பித்தல் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .