2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வர்த்தகருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய வியாபாரியை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கராசா கணேசராசா வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு கிருஸ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தன் தினேஸ்குமார் (வயது 25) என்ற வியாபாரி அல்வாய் நாவலடிச் சந்திப்பகுதியில் புதன்கிழமை (17) புடவை வியாபாரம் செய்துகொண்டிருக்கும் போது, பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய வியாபாரியிடமிருந்து 59 சல்வார்களும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .