2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கத்தி முனையில் நகைகள், பணம் கொள்ளை

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை (17) இரவு நுழைந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை கத்தி முனையில் வெருட்டி சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்நுழைந்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .