2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பாடசாலை மாணவர்களிடமிருந்து போதைப்பொருள் பாக்குகள் மீட்பு

George   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் 6 மாணவர்களிடமிருந்து போதைப் பொருள் பாக்குகள், வியாழக்கிழமை (18) கைப்பற்றப்பட்டுள்ளன.

தகவல் அறிந்து பாடசாலைக்குச் சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மாணவர்களிடமிருந்து குறித்த பாக்குகளை கைப்பற்றியுள்ளனர்.

பாக்குகள் எவ்வாறு மாணவர்களுக்கு கிடைத்தது. யார் விநியோகம் செய்தது என்பது தொடர்பில் குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கருத்துக்கூறுவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .