2025 ஜூன் 28, சனிக்கிழமை

சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் வாகனத்தில் பனஞ்சாராயம் கொண்டு சென்ற இரண்டு சாரதிகளை வெள்ளிக்கிழமை (26) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 392 பனஞ்சாராயம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

நவாலிப்பகுதியிலுள்ள வடிசாலையிலிருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட வாகனத்திலிருந்தே குறித்த பனஞ்சாராயப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் வாகனத்தில் பனஞ்சாராயப் போத்தல்கள் கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கைப்பற்றப்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .