2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குடும்பப் பெண்ணைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2015 ஜூன் 29 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுரேஸ் தேவிகா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என காணவில்லையென அவரது கணவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி வங்கியில் பணம் வைப்பிலிடச் சென்ற மனைவி, இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும், கடந்த 7 நாட்களாக பல இடங்களில் தேடி மனைவி கிடைக்கவில்லை எனவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .