2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சனசமூக நிலையங்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 01 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் நிகழ்வு பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.

பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 48 சனசமூக நிலையங்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது.

பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்தே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு சனசமூக நிலையங்கள் தங்கள் சிறிய அளவிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .