2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அரசியல் கைதிகளின் உறவினர்கள் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்களது உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (02) துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தனர்.

சிறைகளில் நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தங்கள் உறவுகளை விடுவிப்பதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .