2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மகனுடன் ஏற்பட்ட தகராற்றில் தந்தையை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வியாழக்கிழமை (02) தீர்ப்பு வழங்கினார்.
கொடிகாமம் கச்சாய் பகுதியில் 2004ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் 2 பேரைக் கைது செய்ததுடன், இது தொடர்பிலான வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த 2012ஆம் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

சிவராசா கிருஸ்ணகுமார் (வயது 45), சுந்தரலிங்கம் செந்தில்குமார் (வயது 30) ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட யாழ் மேல் நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .